• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவனத்தை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் சட்டமாக்குதல்
- இலங்கை புவியியல் ரீதியில் முக்கிய இடமொன்றில் அமைந்துள்ளமையினால் நாட்டின் பாதுகாப்பிற்கு சம்பிரதாயபூர்வமான அதேபோன்று சம்பிரதாயபூர்வமற்ற விதத்திலான அச்சுறுத்தல்கள் எழும் அபாயம் நிலவுகின்றது. ஆதலால், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நிலையான தன்மையின்பால் தாக்கத்தை செலுத்தும் பிரச்சினைகளை கண்டறிந்து, இந்த பிரச்சினைகளையும் இது சம்பந்தமாக பின்பற்றக்கூடிய திறமுறைகள் பற்றியும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் அரசாங்க தனியார் துறைகள் அதேபோன்று சிவில் சமூகம் உள்ளடக்கிய பொது கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான அறிவுசார் கேந்திர நிலையமொன்றாக செயலாற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட புலனாய்வுச் சபையொன்றாக இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது.

இதன் நோக்கத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவனத்தை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிப்பதற்கும் இதற்குத் தேவையான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.