2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்களின் சில வகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் - இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்களின் சில வகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் எதிர்கொண்ட சிரமங்கள் பற்றி அமைச் சரவையினால் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. அதற்கிணங்க, உரிய தொழிற் சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கென திருப்திகரமான தீர்வொன்றை கண்டறியும் நோக்குடன், உரிய தொழிற்சங்கங் களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தும் பொருட்டும் புகையிரத ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலதாமதமின்றி சிபாரிசுகளை மேற்கொள்ளும் பொருட்டும் விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் தலைமையின் கீழ் பின்வரும் அமைச்சர்கள் குழுவையும் அதன் கலந்தாய்வுகளுக்கு உதவும் முகமாக உரிய உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய உத்தியோகத்தர்கள் குழுவொன்றையும் நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. * மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்கள், விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் - (தலைவர்); * மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்கள், சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்; * மாண்புமிகு ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள், பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்; * மாண்புமிகு அக்கில விராஜ் காரியவசம் அவர்கள், கல்வி அமைச்சர். |