2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தொழிற்பாட்டு செயற்பாடுகளை ஆரம்பிக்கும் பொருட்டு துறைமுக ஆதனத்தையும் பொது வசதிகளையும் குத்தகைக்கு விடுதல் - அரசாங்க மற்றும் தனியார் பங்குடமை முன்னெடுப்பின் கீழ் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தொழிற்பாட்டு செயற்பாடுகளை விருத்தி செய்வதன் மூலம் அதனை அபிவிருத்தி செய்யும் பொருட்டு 2017 யூலை 29 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்ட சலுகை உடன்படிக்கையில் விதித்துரைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்க, இத்துறைமுகத்தின் தொழிற்பாட்டு செயற்பாடுகளை ஆரம்பிக்கும் பொருட்டு அம்பாந்தோட்டை துறைமுக ஆதனத்தையும் பொது வசதிகளையும் குத்தகை அடிப்படையில் அம்பாந்தோட்டை International Port Group (Private) Limited கம்பனிக்கும் அம்பாந்தோட்டை International Port Services Company (Private) Limited கம்பனிக்கும் குத்தகை அடிப்படையில் கையளிக்கப்பட வேண்டும். துறைமுக ஆதனம் மற்றும் பொது வசதிகளின் குத்தகை தொடர்பிலான குத்தகை உடன்படிக்கைகளானவை முன்னர் கைச்சாத்திடப் பட்டதுடன் அதற்கிணங்க இவ் உடன்படிக்கைகளின் அமுலாக்கம் குறித்து உரிய அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |