2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடத்தின் மீள் நிருமாணிப்புக்கான செயற்பாடுகளை துரிதப்படுத்தல் - நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடத்தின் மீள் நிருமாணிப்புக்கான ஒப்பந்தமானது 2015 ஆம் ஆண்டில் அரச அபிவிருத்தி, நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது. கூறப்பட்ட மீள் நிர்மாண செயற்பாடுகளானவை மந்தகதியில் இடம்பெறுவதுடன் அதன் விளைவாக நோயாளர்களும் வைத்தியசாலை அலுவலர்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர் களினால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, கூறப்பட்ட நிர்மாண செயற்பாடு களை துரிதப்படுத்துவதற்கென இலங்கையின் தரைப்படையின் சேவை களைப் பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் வழங்கப்பட்டது. |