• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாவலபிட்டிய, ராகலை, வேவல்வத்த மற்றும் மாலிம்பொட ஆகிய இடங்களில் 4 புதிய நெய்யரி உபமின் நிலையங்களை நிருமாணிப்பதற்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்
- சிறிய நீர்மின் நிலையங்களில் பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை மின்சார அனுப்பீட்டு முறைமையுடன் இணைக்கும் பொருட்டு, நாவலபிட்டிய, ராகலை, வேவல்வத்த மற்றும் மாலிம்பொட ஆகிய இடங்களில் நான்கு (04) நெய்யரி உபமின் நிலையங்களையும் தொடர்புபட்ட அனுப்பீட்டு இணைப்புக்களையும் நிருமாணிப்பதற்கு இலங்கை மின்சாரசபை திட்டமிட்டுள்ளது. இதன் நிர்மாண செயற்பாடுகளானவை 03 பொதிகளின் கீழ் அமுல்படுத்தப்படுவதுடன் அவற்றில் 02 ஆம் பொதியின் கீழ், அத்தியாவசியமான உபகரணங்கள் Lot A மற்றும் Lot B ஆக கொள்வனவு செய்யப்படுகின்றன.

ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 02 ஆம் பொதியில் Lot A யின் கீழ் உபகரணத்தினைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 297.2 மில்லியன் ரூபா தொகைக்கு M/s. Siemens Ltd. நிறுவனத்துக்கும் Lot B யின் கீழ் உபகரணத்தினைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 122.9 மில்லியன் ரூபா தொகைக்கு M/s. Ceylex Engineering (Pvt.) Ltd. நிறுவனத்துக்கும் கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.