• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமானநிலைய ஹோட்டலொன்றை நிருமாணிப்பதற்கான விலைமனுக்களை கோருதல்
- விமான பயணிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த சேவையொன்றினை வழங்கும் நோக்குடன், வரையறுக்கப்பட்ட விமானம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள இரு காணித்துண்டுகளில் நட்சத்திர வகுப்புடன்கூடிய இரு ஹோட்டல்களை நிருமாணித்து நடாத்துவதற்கென இரு முதலீட்டாளர்களுக்கு காணித் துண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அம்முதலீட்டாளர்கள் அவர்களின் பிரேரிப்புகளுக்கு ஏற்ப நடவடிக்கையை முன்னெடுக்க தவறியமை காரணமாக அக்காணித் துண்டுகள் தொடர்பில் மீண்டும் ஒருமுறை முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புக் கோரிக்கைகளை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், அக்காணித் துண்டுகளில் ஒன்றில் 4 - நட்சத்திர விமான ஹோட்டலொன்றைத் நிருமாணிப்பதற்கென ஏற்கனவே பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளதுடன், மற்றைய காணித் துண்டில் 2 - நட்சத்திர ஹோட்டலொன்றைத் நிருமாணித்து பராமரிப்பதற்கென பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவுசெய்வதற்கான பிரேரிப்புகளை கோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.