• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிஸ் மீளமைப்புக்காக நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல்
- நிகழ்கால மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்றதான இலங்கை பொலிசின் மறுசீரமைப்பு காலத்தின் தேவையொன்றாகும். உரிய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கும் குழுவொன்று சிபாரிசுகளை செய்யும் நோக்கத்திற்கென நியமிக்கப்பட்டதுடன், நல்லாட்சி தத்துவங்களை பேணும் பொருட்டு மதிப்பு மிக்க தொழிற்துறையொன்றாக இலங்கை பொலிஸ் சேவையினை நிலைமாற்றும் தேவையினை கூறப்பட்ட குழுவானது வலியுறுத்தியுள்ளது.

ஆதலால், கூறப்பட்ட குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அனுபவம் மிக்க மதியுரைஞர் ஒருவரின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பொலிஸ் சேவையின் மறுசீரமைப்பு தொடர்பில் பரந்துபட்ட நிபுணத்துவத்தைக் கொண்ட பிரித்தானிய பிரசை ஒருவரான பிரித்தானிய நாட்டவரான சேர் ஹியு ஓடே அவர்களின் சேவையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.