2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் செயற்றிறனை அதிகரித்தல் - அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் பாதுகாப்பின் கீழ் 49,654 ஹெக்டெயர் காணிகள் உள்ளதுடன், இக்கம்பனிகளினால் வழங்கப்படும் நேரடி தொழில் வாய்ப்புக்கள் 16,373 ஆகும். உறுதியற்ற நிதி நிலைமை, அதிகளவான நியதிச்சட்ட கடப்பாடுகள், காலாவதியான விவசாய செயன்முறைகள், வினைத்திறனற்ற முகாமைத்துவ செயன்முறைகள் மற்றும் வேறுபட்ட வௌிப்புறக் காரணிகள் ஆகியன இப்பெருந்தோட்ட கம்பனிகளின் நீண்டகால குறைவான செயற்றிறனை விளைவித்துள்ளன. ஆதலால், நவீன தொழினுட்பம் மற்றும் பயிரினங்களின் அறிமுகம், காணி மற்றும் இயற்கை வளங்களின் உத்தம பயன்பாடு, தனியார் முதலீடுகளுக்கான அடைவுத்தன்மை, நிறுவன அபிவிருத்தி ஆகியவற்றுக்கூடாகவும் பெருந்தோட்டத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு தீர்வுகளை வழங்கியும் இப்பெருந்தோட்ட கம்பனிகளின் செயற்றிறன் அதிகரிப்பு செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB), இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC), எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி (EPL), கல்ஓயா பெருந்தோட்டக் கம்பனி (GPL) மற்றும் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் (SLCC) ஆகிய அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வயைின் கீழ் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |