2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புடவைக் கைத்தொழில் மற்றும் ஆடை உற்பத்திகளின் ஆரோக்கிய நிலையையும் பாதுகாப்பினையும் சான்றுப்படுத்தும் முறையொன்றைத் தாபித்தல் - சந்தையிலுள்ள பல்வேறு வகைப்பட்ட ஆடைகளிலிருந்து பயன்பாட்டிற்கு உகந்த தரமிக்க ஆடையினை கண்டறிவது மிக உட்சிக்கல் வாய்ந்த பணியொன்றாகும். முக்கியமாக ஆடை உற்பத்தியின் போதும் பதனிடப்படும் போதும் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் சில இரசாயன பொருட்களின் ஆரோக்கியம் சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டுமென்பதோடு, இது சம்பந்தமாக போதுமான அறிவு உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் வழங்கப்படுதல் வேண்டும். இதற்கமைவாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அத்துடன் இறக்குமதி செய்யப்படும் துணிகள் மற்றும் ஆடை உற்பத்திகள் உள்நாட்டு சந்தைக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் ஆரோக்கிய நிலை சார்ந்த சான்றிதழொன்றைப் பெற்றுக் கொள்வது கட்டாயத் தேவையொன்றாக இந்த சான்றிதழை வழங்கும் அதிகாரத்தை இலங்கை புடவைக் கைத்தொழில், ஆடை நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினது ஒத்துழைப்புடன் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளுக்குரிய தரங்களை நிர்ணயிப்பதற்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக இந்த செயற்பாட்டினை அமுல்படுத்துவதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |