2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐந்து மாவட்டங்களில் தொழினுட்ப காப்பு நிலையங்களைத் தாபித்தல் - 2017 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக புத்தாக்குகைகளை விரைவுபடுத்துவதற்காக நிதியமொன்றைத் தாபிப்பதற்கும் தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு உதவும் பொருட்டும் ஐந்து மாவட்டங்களில் தொழினுட்ப காப்பு நிலையங்களைத் தாபிப்பதற்கும் 100 மில்லியன் ரூபா வீதம் நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது நடைமுறையிலுள்ள புதிய புத்தாக்குநர்களின் நிதியத்தின் கீழ் உத்தேச புத்தாக்குகளை விரைவுபடுத்தும் நிதியத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, பேராதனை, யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய பொறியியல், ஆராய்ச்சி, அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக உத்தேச தொழினுட்ப காப்பு நிலையங்களைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவுக்கு ஒதுக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |