2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திருகோணமலை, நிலாவௌி பிரதேசத்தில் சுற்றுலாதுறைத் தொழிற்பயிற்சி நிலையமொன்றை தாபித்தல் - சுற்றுலாத்துறையின் தொழில் வாய்ப்புகளுக்காக இளைஞர்களை பயிற்றுவிக்கும் நிலையமொன்று 2018 ஆம் ஆண்டில் திருகோணமலை, நிலாவௌி பிரதேசத்தில் தாபிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் சபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலாவௌி பிரதேசத்திலுள்ள காணியிலிருந்து 200 ஏக்கரை உத்தேச பயிற்சி நிலையத்தைத் தாபிப்பதற்காக பயன்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு உடமையாக்கிக் கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |