2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வாழ்க்கைச் செலவினை குறைப்பதற்கான குறுகியகால நடவடிக்கைகள் - நாட்டிற்கு தாக்கத்தைச் செலுத்திய சீரற்ற காலநிலை காரணமாக சில போகங்களில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் தடைப்பட்டதனால் நாட்டின் உணவு உற்பத்தி கணிசமான அளவு குறைந்துள்ளதோடு, உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இது காரணமாய் அமைந்தது. முக்கியமாக அரிசி, தேங்காய் உட்பட மரக்கறி வகைகளின் விலை அதிகரித்தன் காரணமாக நுகர்வோர் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் குறிப்பிடப்பட்டதோடு, இது சம்பந்தமாக அமைச்சரவையில் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தியாவசிய உணவு உற்பத்திகளை போதுமானவாறு சந்தைக்கு வழங்குவதற்காக பின்வரும் நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது: * திறைசேரியின் கையாள்கை மற்றும் மேற்பார்வையின் கீழ் அரிசி இறக்குமதி செய்வதற்கு எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது சதொச நிறுவனத்திற்கோ வசதிகளை செய்தல். * தெங்கு சார்ந்த தொழிலுக்குத் தேவையான தேங்காய் உள்ளீடு மற்றும் பொதுப் பாவனைக்குத் தேவையான தேங்காய் என்பன பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இறக்குமதி செய்தல். * பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு மேலதிகமாக செய்யக்கூடிய சலுகைகள் தொடர்பிலான பிரேரிப்புகளை துரிதமாக சமர்ப்பிக்கும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமித்தல். |