2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அவசர இருதய சத்திர சிகிச்சைகளை தனியார் வைத்தியசாலைகளின் ஊடாக மேற்கொள்தல் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோயியல் அலகின் இரு சத்திர சிகிச்சை கூடங்கள் புனரமைப்புச் செய்யப்படுவதனால், அங்கு ஆற்றப்பட்டு வந்த இருதய சத்திர சிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஆதலால், கொழும்பு தேசிய வைத்தியசாலையானது அங்கிருக்கும் நோயாளர்களை இருதய சத்திர சிகிச்சைகளுக்காக ஶ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு தற்போது இடமாற்றி வருகின்றது. ஆனால் இப்பிரச்சினையை வெற்றி கொள்வதற்கு போதுமான நடவடிக்கையொன்றாக இது அமையவில்லை. அதற்கிணங்க, இருதய நோயியல் அலகுகள் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளுக்கு அரச செலவில் அவசர சிகிச்சைகளைகளுக்காக இருதய நோயாளர்களை பாரப்படுத்துவதற்கும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள இருதய நோயியல் அலகின் புனரமைப்பு வேலையை துரிதப்படுத்துவதற்கும் தேவையான ஒழுங்குகளை செய்யும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |