2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரச முதலீடுகளை வினைத்திறனாக திட்டமிடுதல் மற்றும் கருத்திட்டங்களை தயாரிப்பதற்கு வசதியளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் - அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களை ஆரம்பிக்கும் செயற்பாட்டின் தரத்தினை மேம்படுத்துதல், அமுலாக்க பொறிமுறைகளை மேம்படுத்துதல், வேறுபட்ட அரசாங்க முகவராண்மைகளின் கருத்திட்ட திட்டமிடல் ஆவணங்களை தயாரிக்கும் ஆற்றலை அதிகரித்தல் போன்ற குறிக்கோள்களை அடையும் இலக்குடன் 'கருத்திட்டங்களை தயாரிப்பதற்கு வசதியளிக்கும் நிகழ்ச்சித்திட்டமானது' நடைமுறைப் படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், இந்நோக்கத்திற்குத் தேவையான 4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நிதியீட்ட உடன்படிக்கையொன்றை உலக வங்கியுடன் கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |