• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோசமான காலநிலைமையினால் சேதமடைந்த ஆதனங்களை புனரமைப்பதற்கான அரசாங்க செலவுகளை முகாமித்தல்
- அண்மைய காலங்களில் வரட்சி, வௌ்ளப்பெருக்கு மற்றும் பாதகமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளமைக்கும் பொருட்டும் சேதமடைந்த ஆதனங்களை புனரமைக்கும் பொருட்டும் 32 பில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக ஒதுக்கமொன்றை பொது திறைசேரி ஏற்கனவே வழங்கியுள்ளது. ஆதலால், இந்த நோக்கத்திற்கு மேலும் தேவைப்படும் நிதியங்களை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குள் முகாமிக்க கூடிய விதத்தில், பல அமைச்சுக்களினால் இதுவரை பயன்படுத்தப்படாதுள்ள ஏற்பாடுகளை பயன்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.