• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தொழிற்பாட்டுச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக பங்குதாரர் உடன்படிக்கையினைக் கைச்சாத்திடுதல்
- அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினை அரச தனியார் பங்குடமையின் கீழ் அதன் தொழிற்பாடுகளை விரிவாக்குவதன் மூலம் அபிவிருத்தி செய்யும் பொருட்டு, இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் CHINA MERCHANTS PORT HOLDINGS COMPANY LIMITED கம்பனிக்கும் HAMBANTOTA INTERNATIONAL PORT GROUP (PRIVATE) LIMITED கம்பனிக்கும் HAMBANTOTA INTERNATIONAL PORT SERVICES (PRIVATE) LIMITED கம்பனிக்கும் இடையில் சலுகை உடன்படிக்கையொன்று 2017 யூலை 29 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டது. அதற்கிணங்க, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி கருதி தாபிக்கப்பட்ட இரு தனித்துவமான சேவை கம்பனிகளான INTERNATIONAL PORT GROUP (PRIVATE) LIMITED மற்றும் HAMBANTOTA INTERNATIONAL PORT SERVICES (PRIVATE) LIMITED நிறுவனம் ஆகியன அவற்றின் தொழிற்பாட்டுச் செயற்பாடுகளை இந்த உடன்படிக்கையில் இணங்கிக் கொள்ளப்பட்ட நியதிகளின்படி 2017 திசெம்பர் 09 ஆம் திகதியன்று ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளன.

HAMBANTOTA INTERNATIONAL PORT GROUP (PRIVATE) LIMITED கம்பனியின் 85 சதவீதமான பங்கு மூலதனமானது CHINA MERCHANTS PORT HOLDINGS COMPANY LIMITED கம்பனியினால் அல்லது அதன் இணை நிறுவனத்தினால் உடைமையாக்கப்படும் என்பதுடன் கூறப்பட்டதன் 15 சதவீதமானது இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபைக்கு உரித்தளிக்கப்படும். இதனையொத்ததாக, HAMBANTOTA INTERNATIONAL PORT SERVICES (PRIVATE) LIMITED நிறுவனத்தின் 58 சதவீதமான பங்கு மூலதனமானது HAMBANTOTA INTERNATIONAL PORT GROUP (PRIVATE) LIMITED கம்பனியினால் உடைமையாக்கப்படும் என்பதுடன் மிகுதி 42 சதவீதமானது இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபைக்கு உரித்தளிக்கப்படும். ஆதலால், ஆரம்ப உடன்படிக்கைக்கான குறைநிரப்பு உடன்படிக்கையொன்றாக தயாரிக்கப்பட்ட பங்குதாரர் உடன்படிக்கையினை உரிய தரப்பினர்களுக்கிடையில் கைச்சாத்திடும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.