2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2018 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளுதல் - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 'சுகித்த புரவர' நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின், கீழ் 2018 ஆம் ஆண்டில் 80 புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. புதிய கருத்திட்டங்களை துரிதமாக நிறைவு செய்யும் நோக்குடன், ஒவ்வொரு நிருமாண வேலையினதும் தன்மைக்கேற்ப தேவைப்படும் மதியுரைச் சேவை வழங்கலுக்கான ஒப்பந்தங்களை நகர அபிவிருத்தி் அதிகாரசபைக்கும், மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை காணி நிலமீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கும், மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் மற்றும் கொழும்பு மாநகர சபைக்கும் கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |