• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஓய்வு விடுதிகளை விருத்தி செய்தல்
- இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையினால் நிருவகிக்கப்படும் அநுராதபுரம், நுவரெலியா, பண்டாரவளை, கதிர்காமம் ஆகிய பிரதேசங்களில் உள்ள தேசிய ஓய்வு விடுதிகள் அரசாங்க சேவையாளர்கள் உட்பட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடத்தில் மிக பிரபல்யமடைந்துள்ளது. இந்த ஓய்வு விடுதிகளை நோக்கி மேலும் கவர்ந்திழுக்கும் நோக்கில் குறித்த ஓய்வு விடுதிகளை மீள் விருத்தி செய்யும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.