• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமான தரகு நடவடிக்கைகளை தடுப்பதற்கு சட்டங்களை ஆக்குதல்
- பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் பொது மனையிடத்தினுள் அத்துமீறி நடமாடும் பல்வேறுபட்ட தரகர்களினால் விமானப் பயணிகள் முகங்கொடுக்கும் இடையூறுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு சட்டங்களை ஆக்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, விமான நிலையத்திற்குள் தரகு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் சட்டவிரோதமாக விமான நிலையத்தில் வாகனங்களுக்கு பொருட்களை ஏற்றுதல் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் தவறுகளாக இனங்காண்பதற்கு, அத்தகைய தவறுகளை புரிபவர்களை கைது செய்வதற்கு, சட்டமா அதிபரின் அனுமதியின்றி விமானநிலையம் அமைந்துள்ள நீதிமன்ற அதிகார எல்லையினுள் உள்ள நீதவான் நீதிமன்றமொன்றில் வழக்கு தொடுப்பதற்கு போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சிவில் விமான சேவைகள் சட்டத்தைத் திருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.