2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தன்சானியா, ருவண்டா, அசர்பைஜான், போலந்து ஆகிய நாடுகளுடன் இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல் - தன்சானியா, ருவண்டா, அசர்பைஜான், போலந்து ஆகிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் விமான சேவைகளை முறைப்படுத்தும் நோக்கில், தற்போது உத்தியோத்தர்கள் மட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ள உத்தேச விமான சேவை உடன்படிக்கைகளில் குறித்த ஒவ்வொரு நாட்டுடனும் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் இந்த உடன்படிக்கைகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |