2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக ஹங்கேரிய அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளல் - இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சில அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு ஹங்கேரிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன்கீழ் பின்வரும் கருத்திட்டங்களுக்கு 149 மில்லியன் யூரோ சலுகைக் கடன் வசதிகளை ஹங்கேரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக வழங்கும். (i) பிங்கிரிய - உடுபத்தாவ நீர்வழங்கல் கருத்திட்டம் - (53 மில்லியன் யூரோ) . (ii) கொஹுவல, கிருலப்பன மற்றும் யாங்கல்மோதர மேற்பால நிருமாணிப்பு - (52 மில்லியன் யூரோ). (iii) நீதிமன்ற முகாமைத்துவ மின்னணு முறைமை - (32 மில்லியன் யூரோ). (iv) புகையிரத கடவை பாதுகாப்பு கருத்திட்டம் - (12 மில்லியன் யூரோ). இதற்கமைவாக, மேற்குறிப்பிட்ட கடன்தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான ஹங்கேரிய அரசாங்கத்துடன் நிதி ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை செய்து கொள்வதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |