• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி பெற்றுக் கொள்ளல்
- வடமேல், வடமத்திய மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களிலுள்ள வரண்ட பிரதேசங்களுக்கு மகாவலி கங்கையிலிருந்து நீர் வழங்குவதன் மூலம் இந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் இஹல எலஹர கால்வாய் கருத்திட்டம், வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டம் மற்றும் மினிபே இடதுகரை கால்வாய் புனரமைப்புக் கருத்திட்டம் ஆகிய மூன்று பிரதான முதலீட்டு கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 210 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகையொன்று ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதோடு, இது இஹல எலஹர கால்வாய் கருத்திட்டத்தின் சுரங்கத்துடனான கால்வாய் பகுதியினை நிருமாணித்தல், இஹல எலஹர கால்வாய் கருத்திட்டத்தின் களுகங்கை - மொரகஹகந்த இணைக்கும் கால்வாய் பகுதியை நிருமாணித்தல், வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் மஹகித்துல சுரங்க பாதை, மஹகித்துல மற்றும் மஹகிருல நீர்த்தேக்கங்கள் வரையிலான நீர் கொண்டு செல்லும் கால்வாயின் ஒரு பகுதியை நிருமாணித்தல், குறித்த இந்த நிர்மாணிப்புகள் செய்யப்படும் பிரதேசங்களில் சுற்றாடல் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பணிகளை நடைமுறைப்படுத்துதல் போன்ற நோக்கங்களை செய்யும் பொருட்டு பயன்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.