2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள கலாசார, கலை, கல்வி, இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு - இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் தற்போது நிலவும் நட்புறவினை பலப்படுத்துவதற்காக கலாசார, கலை, கல்வி, இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்குமிடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |