• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டு மேம்பாடு சம்பந்தமாக இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கையில் நேரடி வௌிநாட்டு முதலீடுகளை செய்யும் முக்கிய நாடொன்றாக கொரிய குடியரசு கருதப்படுவதோடு, இந்த நாடு எமது நாட்டிலுள்ள 70 கம்பனிகளுக்கு மேலாக ஏற்கனவே முதலீடுகளை செய்துள்ளது. இலங்கையில் கொரிய முதலீடுகளை விரிவுபடுத்தும் ஆற்றலுள்ள மேலும் பல துறைகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் முதலீட்டு ஒத்துழைப்பையும் கூட்டு உறவினையும் மேலும் பலப்படுத்துவது பொருத்தமானதாகும்.

இதற்கமைவாக, இரண்டு நாடுகளுக்குமிடையில் முதலீட்டு பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.