• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எரிபொருள் களஞ்சிய தாங்கியொன்றை கொலன்னாவை முனைவிடத்தில் தாபித்தல்
- இலங்கையில் ஆகக் குறைந்தது 30 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பொன்றை பேணுவதற்கு ஒவ்வொரு பெற்றோலிய உற்பத்திகளுக்கும் அளவான களஞ்சிய வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பதோடு, இதற்கு மேலும் 100,000 மெற்றிக் தொன் மேலதிக களஞ்சிய கொள்ளளவொன்று தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நடவடிக்கையாக 15,000 கனமீற்றர் பெற்றோல் களஞ்சிய தாங்கியொன்றை கொலன்னாவை முனைவிடத்தில் தாபிப்பதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 15,000 கனமீற்றர் திறன் கொண்ட உள்ளக மிதக்கும் கூரையுடன் எரிபொருள் களஞ்சிய தாங்கியொன்றை கொலன்னாவை முனைவிடத்தில் தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை 412.78 மில்லியன ரூபாவைக் கொண்ட வரியற்ற தொகைக்கு M/s. Indo East Engineering & Construction (Lanka) Pte. Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.