• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கஷ்ட, அதிகஷ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஒருசோடி காலணிகளை வழங்கும் செயற்திட்டத்தை வினைத்திறனாக்குதல்
- கஷ்ட, அதிகஷ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஒருசோடி காலணிகளை வழங்கும் செயற்திட்டம் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்கீழ் 2016 ஆம் ஆண்டில் 621,941 மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்காக 592.2 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது உரிய வழங்குநர்கள் கொள்வனவு செயற்பாட்டின் ஊடாக தெரிவு செய்யப்படுவதோடு, அவர்கள் மாணவர்களின் கால் அளவுகளை பெற்றுக் கொண்டு கால்களுக்கு ஏற்றவாறு காலணிகளை உற்பத்தி செய்து பாடசாலைகளுக்கு கொண்டு சென்று வழங்கும் முறையொன்று பின்பற்றப்பட்டது. ஆயினும் இதற்காக சுமார் ஆறு (06) மாதங்கள் கொண்ட நீண்டகாலமொன்று செல்வதும் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் காலணிகளை வழங்கும் தேவை போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நடப்பாண்டுக்குத் தேவையான காலணிகளை வழங்கும் போது மேற்போந்த வழிமுறைக்குப் பதிலாக மாணவர்களுக்கு காலணி கூப்பனொன்றை வழங்குவதன் மூலம் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அந்தந்த தரங்களுக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு 1,200 ரூபாவிலிருந்து 1,500 ரூபாவரை பெறுமதி கொண்ட காலணி கூப்பன்களை வழங்குவதன் மூலம் இந்த செயற்திட்டத்தை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்காக 808.27 மில்லியன் ரூபாவை கொண்ட செலவினை ஏற்பதற்குமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.