• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பழைய கோட்டை வீதியை (ராஜகிரிய பகுதி) விருத்தி செய்தல்
- உள்நாட்டு வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் நிதி மூலம் தேசிய நெடுஞ்சாலைகளைப் புனரமைப்பதற்கான கருத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வீதிக் கருத்திட்டங்களில் கிடைக்கக் கூடியதாகவுள்ள சேமிப்புகளை பயன்படுத்தி மஹய்யாவ சுரங்கத்தை விரிவுபடுத்துதல், டென்சில் கொப்பேகடுவ வீதியை விரிவுபடுத்துதல், பழைய கோட்டை வீதியை (ராஜகிரிய பகுதி) விருத்தி செய்தல், குருணாகல் நகரத்தில் வீதி காண் முறைமைகளை நிருமாணித்தல் என்பவற்றுக்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பழைய கோட்டை வீதியை (ராஜகிரிய பகுதி) விருத்தி செய்வதன் மூலம் ராஜகிரிய சந்தியில் தற்போது நிலவும் கடும் வாகன நெரிசலை குறைக்க இயலுமாகும் என்பதனால் இந்த வீதிப்பகுதியை விருத்தி செய்வதானது மிகக்குறுகிய காலப்பகுதி ஒன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. இதற்கமைவாக இந்த பணியினை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நேரடி தொழிலாளர் முறையினை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.