• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க காணிகளை பராதீனப்படுத்துவதனை முறைப்படுத்தலும் அரசாங்க காணிகளை சட்டபூர்வமற்ற விதத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருத்தலைத் தடுத்தலும்
- அரசாங்க காணிகளை பராதீனப்படுத்துவதனை முறைப்படுத்துவதற்கும் அரசாங்க காணிகளை சட்டபூர்வமற்ற விதத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருத்தலைத் தடுப்பதற்கும் முறையான வழிமுறை யொன்றைத் தயாரிப்பதற்கும் அதற்குரிய விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்குமாக காணி என்னும் விடயம் தொடர்புபட்ட நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது.

இதற்கமைவாக, இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளையும் இது தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினாலும் பாதுகாப்பு அமைச்சரினாலும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அரசாங்க காணிகளை சட்டபூர்வமற்ற விதத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருத்தலை தடுப்பதற்கும் அரசாங்க காணிகளை பராதீனப்படுத்தற்குரியதாக தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறையினை மேலும் பலப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.