2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ரஜ்கம நகர வீடமைப்புக் கருத்திட்டம் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் ரஜ்கம நகர வீடமைப்புக் கருத்திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது. சுனாமி அனர்த்தத்திற்கு ஆளான 39 குடும்பங்கள் அடங்கலாக குறைந்த வருமானம் பெறும் 92 குடும்பங்களுக்கு இதன்கீழ் வீடுகள் நிருமாணிக்கப்படுவதோடு, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது உரிய காணியில் மிகச் சேதமடைந்த நிலையிலுள்ள 45 வீடுகளையும் புனரமைத்து அபிவிருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 137 குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்பாடு செய்யக்கூடிய விதத்தில் இந்த வீடமைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த கிராமத்திற்கு பொது உட்கட்டமைப்பு வசதிகளாக சனசமூக நிலையமொன்றை நிருமாணிப்பதற்குமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |