• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1941 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க கடன் இணக்க கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
- கடன் சம்பந்தமான பிணக்குகளைத் தீர்க்கும் மிக வினைத்திறன் மிக்க பொறிமுறையொன்றாக கடன் இணக்கசபையை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் தற்போது கொழும்புக்கு மட்டுப்படுத்தப் பட்டுள்ள இந்த சபையின் பணிகளை ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவு படுத்துவதற்காக அதன் நீதிமன்ற அதிகார எல்லையை விரிவுபடுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதன் செயற்பாடுகளை நிலையானதாகவும் பயன்மிக்கதாகவும் உறுப்புரிமையை மேலும் விரிவுபடுத்துவதற்கும் தெரிவுசெய்யும் தகுதிவிதிகளை மாற்றுவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து 1941 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க கடன் இணக்க கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.