2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் மீன்வளர்ப்பினை விருத்தி செய்தல் - மோதல் நிலைமைக்கு முன்னர் உவர் நீர் இறால் பண்ணையொன்றாக பயன்படுத்தப்பட்ட மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 202.343 ஹெக்டெயார் (500ஏக்கர்) விஸ்தீரணமுடைய காணியினுள் நீர்வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழிலை மீள உருவாக்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பு கிடைக்கப் பெறுவதோடு, பிரதேசத்தினுள் நேரடி தொழில்வாய்ப்புக்கள் அண்ணளவாக 900 புதிதாக உருவாகும். இதற்கமைவாக, இந்த காணியினுள் சுமார் 450 நீர்நிலைகளை நிருமாணிப்பதன் மூலம் உவர் நீர் இறால்கள், சேற்று நண்டுகள், Vekkaya, Bait உட்பட வர்த்தக ரீதியில் உயர்வருமானம் பெறக்கூடிய விசேட நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கு அரசாங்கத்தின் கொள்கை செயற்பாட்டிற்கு அமைவாக தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக குத்தகை அடிப்படையில் இந்தக் காணிகளை குறித்தொதுக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |