2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகள் - வௌ்ளப்பெருக்கினை கட்டுப்படுத்தும் அடிப்படை நோக்கில் செயற்படுத்தப்பட்டு வரும் வேரஸ் கங்கை கருத்திட்டத்தின் கீழ் இதுவரை செய்யப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் பொரலஸ்கமுவ, ரத்தனபிட்டிய, பிலியந்தல, வேரஹெர, நுகேகொட ஆகிய பிரதேசங்களில் மழைநீர் வடிகாலமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்தப் பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு அபாயத்தை குறைப்பதற்கு இது காரணமாய் அமைந்துள்ளது. கெஸ்பாவ, மஹரகம, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை ஆகிய பிரதேச செயலக பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு தாக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்த கருத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால அபிவிருத்தி பணிகளை நடைமுறைப்படுத்து வதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்வதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |