• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 நவெம்பர் மாதம் முதல் வாரத்தில் நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாட்டை ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை
- பொது மக்களின் அன்றாட பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் 2017 நவெம்பர் மாதம் முதல் வாரத்தில் நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாடு, இத்தகைய நிலைமை உருவாவதற்கு ஏதுவாய் அமைந்த காரணங்கள், இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை இனங்காணுதல், இத்தகைய நிலைமை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் பற்றி ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட அவருடைய தலைமையிலான அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையானது விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைவாக, பெற்றோல் கையிருப்பு முகாமைத்துவ செயற்பாட்டில் பல காலமாக நிலவிய குறைபாடு திடீரென பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதற்கு அடிப்படை காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதோடு, இத்தகைய நிலைமையொன்று உருவாவதற்கு கட்டாயமாக பொறுப்புக்கூறவேண்டிய உத்தியோகத்தர்களை இனங்காணும் பொருட்டு இது சம்பந்தமாக தொழினுட்ப அறிவுடன் கூடிய உத்தியோகத்தர்கள் மூவர் கொண்ட பரிசோதனைக் குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானதெனவும் இந்த அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுப்பதற்கு மேலதிக எரிபொருள் களஞ்சிய வசதிகளை உருவாக்குதல், நவீன தொகைக்கட்டுப்பாட்டு முகாமைத்துவ வழிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற சிபாரிசுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.