2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்டமுறையான ஒத்துழைப்பு தெரிவித்தல் தொடர்பாக சுவிற்சலாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- குற்றவியல் விடயங்கள் சம்பந்தமாக விசாரணைகளை நடாத்துதல், வழக்கு தொடுத்தல், குற்றங்களைத் தடுத்தல், முறைகேடான நடவடிக்கைகளினால் ஈட்டும் நிதிகளை அரசுடமையாக்குதல் போன்ற விடயங்களில் இரு நாடுகளிலும் நடைமுறையிலுள்ள சட்டங்களை வலுவூட்டும் நோக்கில் குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்டமுறையான ஒத்துழைப்பினை தெரிவித்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை இலங்கைக்கும் சுவிற்சலாந்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு 2017 யூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இரு நாடுகளினதும் உரிய உத்தியோகத்தர்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் உடன்பாடு காணப்பட்டுள்ளவாறு இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் இதனை சில வருடங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதன் பின்னர் இது சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குமாக நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |