• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்தினது விளைபயனாக உற்பத்தியாகும் சாம்பலை அகற்றுதல்
- 900 மெ.வொ. சக்தி கொள்திறனுடைய புத்தளம் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது வருடத்திற்கு சுமார் 2.4 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரி எரிக்கப்படுகின்றது. இதன் விளைபயனாக வருடத்திற்கு சுமார் 255,000 மெற்றிக்தொன் சாம்பல் உற்பத்தியாவதோடு, சீமெந்து மற்றும் கூரைக்காக பயன்படுத்தப்படும் கூரை சீட் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்துகின்றமையினால் இந்த சாம்பலுக்கு உயர் சந்தைக் கேள்வி நிலவுகின்றது.

ஆதலால், இந்த மின் உற்பத்தி நிலையத்தில் சேர்ந்துள்ள சாம்பலை அகற்றுவதற்காக அரசாங்கத்தின் கேள்வி நடவடிக்கைமுறையின் கீழ் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கேள்வி முன்வைக்கப்பட்ட நிறுவனங் களிலிருந்து தகைமைபெற்ற நிறுவனங்களுக்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசின் பிரகாரம் சாம்பல் தொகையினை அகற்றுவதற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.