2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் கருத்தரங்கு என்பவற்றை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல் - உள்ளூராட்சி துறைக்குரியதாக தாபிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவராக இலங்கை செயலாற்றுகின்றது. இந்த ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் சர்வதேச மாநாடும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடாத்தப்படுவதோடு, உள்ளூராட்சி துறையில் நிகழும் மாற்றங்கள் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கின்றது. இதற்கமைவாக, பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் கருத்தரங்கு என்பவற்றை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவது தொடர்பிலான பிரேரிப்பொன்றை இந்த ஆண்டு நவெம்பர் மாதம் 21 தொடக்கம் 24 ஆம் திகதிவரை மோல்டா இராச்சியத்தில் நடாத்தப்படும் மாநாட்டில் சமர்ப்பிக்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |