2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தை திருத்துதல் - 1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் மூலம் குடியிருப்பு மற்றும் கமத்தொழில் நோக்கங்களுக்காக விவசாயிகளுக்கும் பாரிய விவசாய நடவடிக்கைகளுக்காக நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அரசாங்க காணிகளை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சட்ட பின்னணி வழங்கப்பட்டது. சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு, பின்னர் இந்தக் கட்டளைச் சட்டமானது காலத்திற்கு காலம் திருத்தப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பல்வேறுபட்ட அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தற்போது நிலவும் சமூக தேவைகளினையும் அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டளைச் சட்டத்திற்கு மேலும் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தளர்த்தப்பட்ட நிபந்தனைகளைக் கொண்ட உரிமப் பத்திரமொன்றை அறிமுகப்படுத்துதல், உரிமப்பத்திரத்தின் கீழ் குடியிருப்புகளுக்காக வழங்கப்பட்ட காணிகளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த இடமளித்தல், பின்னுரிமையாளரின் பெயர் குறிப்பிடாது உரிமப்பத்திர உரிமையாளர் ஒருவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்குச் சொந்தமான உரிமைப்பத்திரத்திற்கான சொத்துக்களின் உரிமையானது பொது சிவில் சட்டத்தின் கீழ் ஏற்புடையதாகும் ஏற்பாடுகளுக்கு உட்படுத்துதல் போன்ற திருத்தங்களை அறிமுகப்படுத்தி காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |