2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நடுத்தர வருமான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பிலான துரித நிகழ்ச்சித்திட்டம் - நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் நகர மற்றும் பகுதி நகர பிரதேசங்களில் வீடுகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் விருத்தி செய்யும் துரித நிகழ்ச்சித் திட்டமொன்று தனியார் துறையின் பங்களிப்புடன் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை வெ்றறிகரமாக நடைமுறைப்பபடுத்துவதற்காக இதன் கீழ் நிருமாணிக்கப்படும் வீடமைப்பு கருத்திட்டத்திற்குத் தேவையான காணித் துண்டுகளை துரிதமாக குறித்தொதுக்குவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக வீடமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள அக்மீமன, குருநாகல், புத்தளம், அம்பாந்தோட்டை, ஆணமடுவை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான சில காணித் துண்டுகளை தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு விடுவித்துக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |