• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஊடக பயிற்சி நிறுவனத்தை விருத்தி செய்தல்
- ஜேர்மன் பெட்ரிக் ஈபட் அமைப்பின் நிதி மற்றும் வளப் பங்களிப்புடன் 1982 ஆம் ஆண்டில் இலங்கை ஊடக பயிற்சி நிறுவனமானது இலங்கை தொலைக்காட்சி சேவைக்குத் தேவையான தொழினுட்ப கலைஞர் களை பயிற்றுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. ஊடக துறையிலுள்ள பல்வேறுபட்ட தொழில் சார்பாளர்களை இலக்காகக் கொண்டு சுமார் 18 பாடநெறிகள் இந்த நிறுவனத்தினால் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றதோடு, சுமார் 450 மாணவர்கள் வருடாந்தம் இங்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் ஊடகத் துறைக்குத் தேவையான தொழில் ரீதியிலான பயிற்சிகளை வழங்கும் தேசிய நிறுவனமொன்றாக இலங்கை ஊடக பயிற்சி நிறுவனத்தை உருவாக்கும் பொருட்டு மூன்று (03) வருட கால திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிறுவனத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை விரிவு படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.