• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமான ஓட்டப்பயிற்சிக் கல்லூரி யொன்றைத் தாபித்தல்
- மட்டக்களப்பு விமான நிலையத்தை சிறந்த முறையில் சிவில் விமானசேவைகள் தொழிற்பாட்டுக்காக இடமளிக்கப்பட்டதும் சுற்றுலா தொழிலின் விருத்திக்கு ஒருங்கிணைவாக உள்நாட்டு சிவில் விமானசேவை தொழிலில் ஏற்படக்கூடிய புதிய வளர்ச்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் கணிசமான விருத்தி ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் விமான நடவடிக்கைகளுக்கு இந்த பிரதேசத்தில் நிலவும் பொருத்தமான காலநிலை, மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து 135 கிலோ 05 மீற்றருக்குள் உள்நாட்டு சிறு விமான நிலையங்கள் அமைந்திருத்தல் மற்றும் விமானங்களின் நெரிசல் குறைந்த சுதந்திரமான விமான பிரதேசமொன்றில் தொழிற்படக்கூடியதாக இருத்தல் போன்ற சார்பான விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மட்டக்களப்பு விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகளை கையாள்வதற்கு அக்கறையுள்ள தரப்பினர்களிடமிருந்து விருப்புத் தெரிவிப்பு பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, மட்டக்களப்பு விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகளின் கையாள்கை மற்றும் விமான ஓட்டப்பயிற்சிக் கல்லூரியொன்றைத் தாபிப்பதற்கு M/s. Skurai Aviation நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.