• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாட்டைத் துரிதமாக வழமை நிலைக்கு கொண்டுவருதல்
- பொதுமக்களின் அன்றாட பணிகளுக்கு தடையாக நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு பற்றி அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டதோடு, நிலவும் பெற்றோல் தட்டுப்பாட்டினைத் தவிர்ப்பதற்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், இத்தகைய நிலைமையொன்று உருவாகுவதற்கு ஏதுவாய் அமைந்த காரணங்கள், இது சம்பந்தமாக பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர்கள் எவர் என்பது பற்றியும் அத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் மீண்டும் உருவாவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பன பற்றி பரிசீலனை செய்து உடனடியாக அதன் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பின்வரும் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்கள்,
விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் - (தலைவர்);

(ii) மாண்புமிகு அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள்,
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்;

(iii) மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்கள்,
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்;

(iv) மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்கள்,
பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்.