2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
400 மெகாவொட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தாபித்தல் - ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிருமாணிக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டைக்கு மின்சாரம் வழங்கும் அடிப்படை நோக்கிலும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய மின்சார பற்றாக்குறையை தவிர்ப்பதற்குமாக சீன அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து நடைமுறைப்படுத்தும் கருத்திட்டமொன்றாக 400 மெகாவொட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமொன்றை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை சீன அரசாங்கத்தினால் பெயர் குறித்துள்ள China Machinery Engineering Corporation கம்பனியும் இலங்கை மின்சார சபையும் இணைந்து கூட்டு தொழில்முயற்சியொன்றாக நடைமுறைப்படுத் தவுள்ளன. உத்தேச கருத்திட்டம் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நீண்டகால வலுசக்தி திட்டத்தில் உள்ளடக்கி உரிய அங்கீகாரங்களுடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |