• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கலிகமுவ நீர்வழங்கல் திட்டம்
- நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு விருத்தி கருத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 540 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 530,000 மக்களுக்கு விருத்தி செய்யப்பட்ட நீர் வழங்கல் வசதிகளையும் மேலும் சுமார் 175,000 மக்களுக்கு விருத்தி செய்யப்பட்ட துப்பரவேற்பாட்டு வசதிகளையும் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கருத்திட்டத்தின் முதலாவது பிரிவின் கீழ் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ நீர்வழங்கல் திட்டத்தை நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, இதன் மூலம் எதிர்காலத்தில் கலிகமுவ நகரமும் அடங்கலாக 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 45,000 மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். இதற்கமைவாக நாளொன்றுக்கு 9,000 கன மீற்றர்கள் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தி ஆற்றலைக் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிருமாணித்தல், விநியோக குழாய்களைப் பதித்தல் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 4.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கும் 1.268 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கும் M/s. Sierra Construction (Pvt) Ltd. நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.