• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த அக்குரஸ்ஸ நில்வலா தேசிய கல்விக் கல்லூரியைப் புனரமைத்தல்
- கடந்த மே மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமையின் தாக்கம் காரணமாக அக்குரஸ்ஸ நில்வலா தேசிய கல்வியியல் கல்லூரியின் கட்டடங்களும் உபகரணங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக ஆசிரியர்களின் பயிற்சி பாடநெறிகளை உரிய காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்கு இயலாமற் போயுள்ளமையினால் அவர்களை பாடசாலைகளுக்கு இணைப்பதிலும் தாமதமேற்பட்டுள்ளது.

ஆதலால், சேதமடைந்த இந்த கட்டடங்களை துரிதமாக புனரமைத்து எதிர்கால தேவைகளுக்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்துவது அத்தியாவசியமானதோடு, இதற்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதற்கு செக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக நில்வலா தேசிய கல்விக் கல்லூரியின் புனரமைப்பு மற்றும் விருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக 15 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு செக் குடியரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.