• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்காக பயன்படுத்தப்படும் காணியை உடைமையாக்குதல்
- ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நிருவாக தலைநகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பத்தரமுல்லை, கடுவெல, ஶ்ரீ ஜயவர்தனபுர மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களிலிருந்து சுவீகரிக்கப்பட்டுள்ள சுமார் 1,000 ஏக்கர்களைக் கொண்ட காணிகளிலிருந்து ஒரு பகுதி பாராளுமன்ற கட்டடத்தொகுதியை நிருமாணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலும் ஒரு பகுதி நீர் ஏந்து பிரதேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்காக பயன்படுத்தப்படுகின்ற போதிலும் இலங்கை பாராளுமன்றத்திற்கு இதுவரை முறையாக கையளிக்கபடாத காணித் துண்டுகளை இலங்கை பாராளுமன்றத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.