• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
100 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரசைகளுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குதல்
- 100 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரசைகள் நாட்டில் இருப்பது அந்த நாட்டின் சுகாதார துறையின் அபிவிருத்தியை சுட்டிக்காட்டும் அளவுகோளாக கருதப்படுகின்றது. தற்போது 100 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரசைகள் சுமார் 350 பேர் இலங்கையில் வசிக்கின்றமை தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக, அவர்களுடைய ஆயுள் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் 100 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் மூத்த பிரசைகளுக்கு 5,000/- ரூபாவைக் கொண்ட மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்கும் பொருட்டு சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.