2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிய உள்ளூராட்சி அதிகாரசபைகளை தாபித்தல் - புதிய உள்ளூராட்சி அதிகாரசபைகளைத் தாபிப்பதற்கும் நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி சபைகளைத் தரமுயர்த்துவதற்குமாக நிபுணர்களின் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட தகுதிவிதிகளுக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகுதி விதிகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதுள்ள அம்பகமுவ பிரதேச சபை அதிகார பிரதேசத்தை அம்பகமுவ, மஸ்கெலிய மற்றும் நோர்வூட் பிரதேச சபைகள் என 03 புதிய உள்ளூராட்சி அதிகார சபைகளாக தாபிப்பதற்கும் தற்போதுள்ள நுவரெலியா பிரதேச சபை அதிகார பிரதேசத்தை நுவரெலியா, அக்கரபத்தனை, கொட்டகலை பிரதேச சபைகள் என 03 புதிய உள்ளூராட்சி அதிகார சபைகளாக தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மேற்போந்த உள்ளூராட்சி அதிகாரசபைகளும் அடங்கலாக சகல உள்ளூராட்சி அதிகாரசபைகளைத் தாபித்தல் சம்பந்தமான கட்டளைகள் 2017‑11‑01 ஆம் திகதியன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |