• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீரற்ற காலநிலைமை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான விகாரைகளை புனரமைப்புச் செய்தல்
- 2017 மே மாதம் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக நாடுபூராகவுமுள்ள பல பிரதேசங்களில் விகாரைகளின் கட்டங்கள் உடைந்தமை, கூரைகள் உடைந்தமை, பதுகாப்பு சுவர்கள் உட்பட புனித அரசமர சுற்றுப்பிரகாரம் உடைந்தமை போன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, இந்த சேதங்களின் பெறுமதி 113.87 மில்லியன் ரூபாவென மாவட்ட செயலாளர்களினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. இத்தகைய சேதங்களை புனரமைப்பதற்காக ஐக்கிய நாடுகள் வெசாக் தின விழாவை நடாத்துவதற்காக புத்தசாசன அமைச்சுக்கு குறித்தொதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளிலிருந்து சேமிப்பாகவுள்ள 113.87 மில்லியன் ரூபாவினை செலவு செய்து 09 மாவட்டங்களிலுள்ள விகாரைகளை புனரமைப்பதற்கு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.