• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய நுழைவாயில் விருத்தி கருத்திட்டம்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையில் கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் 18 ஆம் மைல் கல்லுக்கு அண்மைய பிரதேசத்தை போக்குவரத்து, வர்த்தக மற்றும் வியாபார நோக்கங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்கள் எனபன உள்ளடக்கப்படும் விதத்தை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் இணைந்த வசுதரிப்பு நிலையமொன்றைத் தாபித்தல், புகையிரத நிலையத்தை விருத்தி செய்தல், வாடகை வாகனங்கள் நிறுத்துமிடம், சுற்றுலாத்துறை வாகனங்கள் நிறுத்துமிடம், வங்கிச் சேவை, படமாளிகைகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு நீர்பரப்பு, கடைத்தொகுதி போன்ற வசதிகள் தாபிக்கப்படவுள்ளன. இதற்கமைவாக உத்தேச 'பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய நுழைவாயில்' விருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.