2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராஜதந்திர, விசேட மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ளவர்கள் விசா அனுமதியைப் பெறுவதிலிருந்து விலக்களிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையில் நிலவும் சிநேகபூர்வமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இராஜதந்திர, விசேட மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ள இலங்கை மற்றும் கட்டார் பிரசைகள் விசா அனுமதியைப் பெறுவதிலிருந்து விலக்களிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |